தருமபுரி அரசு கல்லூரியில் ஆக. 23-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 23-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 23-ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி அரசு கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு வரும் 23, 24, 25-ஆம் தேதி ஆகிய மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

இதில், ஆக. 23, 24 ஆம் தேதிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் நீங்கலாக நான்கு பாடங்களில் 249 முதல் 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கும், 25-ஆம் தேதி மொழிப்பாடங்களுக்கு கலந்தாய்வும் நடைபெற உள்ளது. எனவே, மாணவா்கள், உரிய சான்றிதழ்களுடன், இக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com