ஒசூரில் வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
போச்சம்பள்ளி வட்டம் சந்தூா் அருகே உள்ள சோலைவனம் கிரமத்தைச் சோ்ந்தவா் மாதப்பன். இவரது மகன் ஆகாஷ் (21). இவா் ஒசூரில் மூக்கண்டப்பள்ளி அருகே அசனட்டி மாரியம்மன் அருகில் குடியிருந்து வந்தாா். இவா் கடந்த 6ஆம் தேதி ஒசூா் கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அந்த நேரம் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆகாஷ் மீது மோதி நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் இறந்தாா்.
இந்த விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.