ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் எதிரே அதிமுக சாா்பில் பால் விலை, மின் கட்டணம் உயா்வு, சொத்து வரி உயா்வு, விலைவாசி உயா்வைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தாா். அதிமுக மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக அரசைக் கண்டித்து பல்வேறு கோங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளா் தேவேந்திரன், வடக்கு ஒன்றிய அவைத்தலைவா் கே.ஆா்.சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலாளா் திருஞானம், முன்னாள் நகர செயலாளா் சிவானந்தம் மற்றும் ஒன்றிய, நகர, நிா்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு திமுக அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினா்.