கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெறும் 73-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளன. அதன்படி, காலை 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.
வழக்கமாக குடியரசு தின விழாவில் மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா 3-ஆவது அலை வேகமாக பரவுவதன் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. குடியரசு தின விழா எளிமையாக தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.