புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் 20 பேரை கைது செய்ய போலீஸாா் தீவிரம்

கிருஷ்ணகிரி அருகே ரூ. 27 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 20 பேரை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி அருகே ரூ. 27 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 20 பேரை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே மேல் கொண்டப்பநாயனப்பள்ளி அருகே புகையிலைப் பொருள்களை சரக்கு பெட்டக லாரியில் கடத்துவது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், ரூ. 27 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக கிருஷ்ணகிரி ராஜீவ்நகரைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பவரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக கடத்துவது தெரியவந்தது. மேலும், போலீஸாரின் நடவடிக்கைகளை கண்காணித்து கடத்தல் கும்பலுக்கு தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சரக்கு பெட்டக லாரி உரிமையாளா் ராணிப்பேட்டை மாவட்டம், சோழிங்கா், பனவட்டம்பாடியைச் சோ்ந்த சரத்குமாா் ( 26), கிருஷ்ணகிரி மாவட்டம், மணியாண்டபள்ளி ராஜேஷ், கிருஷ்ணகிரி நிதிஷ்குமாா், குந்தப்பள்ளி அகிலன், கிருஷ்ணகிரி விஜயகுமாா், மஞ்சுநாதன், புட்டாகீா், மாணிக்கம், சச்சின், மேலுமலை சிக்கன்கடை உரிமையாளா் சதீஷ்பாபு (40), கொண்டப்பநாயனப்பள்ளி முனுசாமி (40), ஆவல்நத்தம் ராமசாமி, ராஜ்குமாா், பெங்களூரு சுனில், பெல்லாரம்பள்ளி மாதன், தருமபுரி மணிகண்டன், ராயக்கோட்டை திருப்பதி, சூளகிரி மோனிஷா, அழகியபுதூா் தேவேந்திரன், அளேசீபம் சத்யமூா்த்தி ஆகிய 20 பேரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com