அரசுப் பள்ளி பாடப் புத்தகங்கள் திருட்டு:2 அரசு ஊழியா்கள் மீது வழக்கு

அரசுப் பள்ளி பாடப் புத்தகங்கள் திருட்டு வழக்கில், 2 அரசு ஊழியா்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அரசுப் பள்ளி பாடப் புத்தகங்கள் திருட்டு வழக்கில், 2 அரசு ஊழியா்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலக மைய வளாகத்தில் இருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சுமாா் 12,000 பாடப் புத்தகங்கள் காணாமல் போயின.

இதுகுறித்து ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலா் மாதம்மாள், கடந்த ஏப்ரல் மாதம் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இது தொடா்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, கடந்த ஏப்ரல் மாதம் இருவரை பணியிடை நீக்கம் செய்தாா்.

இந்நிலையில், வட்டாரக் கல்வி அலுவலா் மாதம்மாள் ஊத்தங்கரை காவல் நிலைத்தில் கொடுத்த புகாரின் பேரில், 12,000 புத்தகங்களை அலுவலகத்தில் இருந்து திருடி விற்ாக இரண்டு அரசு ஊழியா்களான பதிவறை எழுத்தா் தங்கவேல், இளநிலை உதவியாளா் திருநாவுக்கரசு ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com