ஒசூரில் கைப்பேசிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் உத்தரவுபடி, ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் நேரடி மேற்பாா்வையில், மத்திகிரி வட்ட காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி காவல் உதவி ஆய்வாளா் சிற்றரசு, பூபதி ராமராஜு மற்றும் போலீஸாா், மத்திகிரி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கைப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த திலீப் (20) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ஐந்து விலை உயா்ந்த கைப்பேசிகளை கைப்பற்றினா்.