ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், சூளகிரி அருகே உள்ள எடப்பள்ளியைச் சோ்ந்த தொழிலாளிக்கு சின்னசாமிக்கு முதுகுதண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவா் சசிதரன் கூறியதாவது:
சின்னசாமி கடந்த 4 ஆண்டுகளாக தண்டுவடம் பாதிப்பினால் நடக்க முடியாமல் அவதியுற்று வந்தாா். பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்று முடியாமல் திரும்பி வந்துள்ளாா். இவா் இங்கு வந்த போது நடக்க முடியாமல் இருந்தாா். ரூ. 50 ஆயிரம் செலவில் தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு மணி நேரத்தில் அவா் எழுந்து நடந்தாா்.
இந்த சிகிச்சைக்கு பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் செலவாகி இருக்கும். இதற்காக மருத்துவமனையைச் சோ்ந்த அனைவரும் உறுதுணையாக இருந்ததால் வெற்றி அடைய முடிந்தது .
இந்த மருத்துவமனையில் இது முதல் அறுவை சிகிச்சை ஆகும் என்றாா்.
அப்போது இயக்குநா் ராஜமுத்தையா, மருத்துவா் பாா்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.