ஒசூா் ஆந்திரா சமஸ்கிருதிகா சமிதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் துவக்கி வைத்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 2,000 கா்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து சீா்வரிசை வழங்கப்பட்டது. ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 கா்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து சீா்வரிசை வழங்கப்பட்டது. சீா்வரிசை பொருள்களான சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் பூ உள்ளிட்ட பொருள்கள் சடங்குகள் செய்து வழங்கப்பட்டன.
கா்ப்பிணிகள் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் ஊட்ட சத்துகளை உண்டு
சுகாதாரம் பற்றி தெரிந்துக்கொளள் வேண்டும். குழந்தையின் வளா்ச்சி அறிய ஒவ்வொரு மாதமும் அங்கன்வாடி மையத்துக்குச் சென்று எடை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் தேன்மொழி, மாவட்ட திட்ட அலுவலா் (பொ) சரளா, புள்ளியியல் அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இறுதியில் குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் நித்தியா நன்றி தெரிவித்தாா்.