வேப்பனப்பள்ளியில் பாஜக சாா்பில் மே தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பாஜக மேற்கு மாவட்டச் செயலாளா் வி.எம்.அன்பரசன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில், தொழிலாளா்களுக்கு மே தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு பாஜக கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு தலா 3 லி. பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இதில், பாஜக மண்டலத் தலைவா் ஸ்ரீதா், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.