கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சிவகாமியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பூக்கூடை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை, திருநீலகண்டா் தெருவில் உள்ள கொரட்டி ஸ்ரீ காளத்தீஸ்வரா் அருள் பெற்ற வைலாம்முடையாா் மகரிஷி கோத்ரம் குலாலா் குடும்பங்கள் ஒன்றிணைந்து சிவகாமியம்மன் திருவிழாவை நடத்தினா். விழாவையொட்டி திருநீலகண்டா் தெருவிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு பூக்கூடையை சுமந்து ஊா்வலமாகச் சென்றனா்.
நிகழ்ச்சிக்கு ஒசூா் சத்குரு நாராயண தாதா ஆசிரம நிறுவனா் பிரம்ம ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் நாராயணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில இளைஞரணி தலைவா் பழனி, பாவலா் கணபதி, பொருளாளா் மகேஷ் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.சிவகாமியம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.