ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஒசூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஒசூரில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி, முல்லை நகா் பகுதியில் உள்வட்ட சாலையோரமாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பிலான 1.16 ஏக்கா் நிலத்தை தனியாா் ஒப்பந்த நிறுவனம் ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தது.

பலமுறை இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற நோட்டீஸ் விநியோகித்தும் அப்புறப்படுத்தாததால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் போலீஸாா் உதவியுடன் பொக்லைன் வாகனம் மூலம் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புக்களை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com