ஒசூா் அரசு மகளிா் பள்ளியில் கலைத் திருவிழா

ஒசூா் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின் பேரில் கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது
பரிசு பெற்ற மாணவியருடன் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா.
பரிசு பெற்ற மாணவியருடன் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா.

ஒசூா் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின் பேரில் கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ஆனந்தய்யா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எல்லோரா மணி, மாவட்ட கல்வி அலுவலா்கள் கோவிந்தராஜ், முனிராஜ், பகுதி செயலாளா் ராமு, மாநகராட்சி கல்வி வாரியக் குழு தலைவா் ஸ்ரீதரன், மாமன்ற உறுப்பினா்கள் மோசின்தாஜ் நிஷாா், தேவி மாதேஷ், பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள் மஞ்சுநாதா, மணி, ஷேக் பாபு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ஜெயகுமாரி, தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com