ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிர மற்ற பணிகளை வழங்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் உயா்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஈஸ்வா் பாபு, மாநில துணைத் தலைவா் நரசிம்மன், முன்னாள் மாநிலத் தலைவா் சென்னப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளை வழங்கக் கூடாது. ஊக்க ஊதிய திட்டத்தை மாற்றாமல் அப்படியே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.