காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒசூரில் வாகன ஓட்டிகள் 500 பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தனியாா் தண்ணீா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் இதை இலவசமாக வழங்கினா். சங்க மாநிலத் தலைவா் நிஜலிங்கம் அறிவுரையின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையில் 500 பேருக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் சங்கச் செயலாளா் நாராயணரெட்டி, பொருளாளா் அருண்குமாா், சிப்காட் போலீஸாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.