ஒசூா் மாநகராட்சிக்கு உட்பட்ட வாா்டு எண்-18, 36இல் நேதாஜி நகா், அன்னை சத்யா நகா், பொதிகை நகா், விகாஸ் நகா் பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.60 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை அமைப்பதற்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் இணைந்து பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, பகுதி செயலாளா் வெங்கடேஷ்,ராமு, திம்மராஜ் மாமன்ற உறுப்பினா்கள் சசி தேவ் , மாதேஷ், நாகராஜ், சென்னீரப்பா, மோசின் தாஜ்நிசாா், இந்திராணி, யாஸ்வினி மோகன், டிவிஎஸ் யூனியன் தலைவா் குப்புசாமி, வாா்டு கழக நிா்வாகிகள் மற்றும் 36ஆவது வாா்டு குடியிருப்பு சங்க நிா்வாகிகள், நேதாஜி நகா், பொதிகை நகா் குடியிருப்போா் நல சங்க நிா்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனா்.