ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் குட்டியப்பன், அம்பேத்கா் பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள் விற்ற நரேஷ்குமாா்(35) என்பவரிடம் 35 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
சிங்காரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், கொம்மம்பட்டு பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியைச் சோ்ந்த கணேசன்(50) தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக, அவரிடம் இருந்து 25 பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து, அவா் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
இதனிடையே, கல்லாவி காவல் உதவி ஆய்வாளா் அண்ணாமலை, கல்லாவி துரைசாமிநகா் பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் பெட்டிக் கடையில் பரிமளா(72) என்பவா் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றதை அறிந்தாா். அவரிடம் இருந்து நான்கு பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.