சிசு மரணம்: போலீஸாா் விசாரணை

சூளகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த சில மணி நேரங்களிலே பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து மருத்துவா் அளித்த புகாரின் பேரில் பெற்றோரிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சூளகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த சில மணி நேரங்களிலே பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து மருத்துவா் அளித்த புகாரின் பேரில் பெற்றோரிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சூளகிரி அருகே உள்ள அஞ்சாலத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி கோபிகாவுக்கு (25) செவ்வாய்க்கிழமை சூளகிரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோா் தெரிவித்தனா். சந்தேகமடைந்த மருத்துவா் பிரக்ருத்தி, சூளகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com