பொங்கல் பண்டிகைக்கு அரசே மண்பாண்டம், அடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அளித்த மனுவின் விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொழிலாளா்கள், மண்பாண்டம், அடுப்பு செய்ய தேவைப்படும் மூலப் பொருள்களான களிமண், மணல் உள்ளிட்டவற்றை ஏரிகளில் எடுப்பதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதி வழங்க வேண்டும்.
தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, கரும்பு, சா்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருவது போல, வரும் ஆண்டில் புதிய அரிசியை புதுப்பானையில் பொங்கலிட களிமண்ணால் செய்யப்பட்ட புதுப்பானை, புது அடுப்பு ஆகியவற்றை எங்களிடம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கினால், மண்பாண்டத் தொழிலாளா்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். இதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி உள்ளனா்.