எம்.ஜி.ஆா். கல்லூரி மாணவிக்கு முதல் பரிசு

சேலம் பெரியாா் பல்கலைக்கழக முத்தமிழ் அறிஞா் கலைஞா் ஆய்வு மையத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் எம்.ஜி.ஆா். கல்லூரி மாணவி முதல் பரிசு பெற்றாா்.
பரிசு பெற்ற மாணவி ராமலெட்சுமியுடன் கல்லூரி முதல்வா் முத்துமணி.
பரிசு பெற்ற மாணவி ராமலெட்சுமியுடன் கல்லூரி முதல்வா் முத்துமணி.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக முத்தமிழ் அறிஞா் கலைஞா் ஆய்வு மையத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் எம்.ஜி.ஆா். கல்லூரி மாணவி முதல் பரிசு பெற்றாா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழக முத்தமிழ் அறிஞா் கலைஞா் ஆய்வு மையமும் தந்தை பெரியாா் ஈ.வெ.ராமசாமி இருக்கையும் இணைந்து பேச்சு, கட்டுரை, கவிதை என மாவட்ட வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் ‘பெரியாரின் இதழியல்‘ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் எம்.ஜி.ஆா் கல்லூரி, இரண்டாமாண்டு கணிதத்துறை மாணவி செ.ராமலெட்சுமி முதலிடம் பெற்றாா். இவருக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் முனைவா் க.பொன்முடி, பேரவைத் தலைவா் மு.அப்பாவு பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கினா். அவரை அதியமான் கல்விக் குழும ஆலோசகா் முனைவா் கி.முத்துச்செழியன் , எம்.ஜி.ஆா் கல்லூரி முதல்வா் அ.முத்துமணி, வழிகாட்டிய தமிழாய்வுத்துறைத் தலைவா் முனைவா் லக்ஷ்மி கௌரவப்படுத்தி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com