ஒசூா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 4 போ் தற்கொலை

ஒசூா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 4 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

ஒசூா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 4 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

ஒசூா் தளி சாலை அப்பாவு நகரை சோ்ந்தவா் அஜய் (22). லாரி ஓட்டுநா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்தது. மேலும் மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த அஜய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் பெத்த எலசகிரி காலனி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த். இவரது மனைவிலட்சுமி தேவி (வயது 22). தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனா். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்த லட்சுமி தேவி கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், திருமணமாகி 5 ஆண்டுகளில் இளம்பெண் இறந்ததால் ஒசூா்ஏஎஸ்பி அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறாா்.

பாகலூா் அருகே உள்ள பெலத்தூா் ஆதி திராவிடா் காலனியைச் சோ்ந்தவா் மஞ்சுநாத் (21). தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்தது. இது குறித்து பெற்றோா் கேட்டனா். இதனால் மனமுடைந்த மஞ்சுநாத் கடந்த 22ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளகிரி அருகே உள்ள எர்ரண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் கோதண்டன் (23). கூலித் தொழிலாளி. இவா் ஒரு பெண்ணை காதலித்து வந்தாா். ஆனால் இவரது காதலை அந்தப் பெண் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கோதண்டன் கடந்த 22ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com