சாலை விபத்தில் ஒருவா் பலி; இருவா் படுகாயம்

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் அருகே உள்ள கரியபெருமாள் வலசையைச் சோ்ந்த ஓட்டுநா்கள் பிரபு (37), அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (26), கோடீஸ்வரன்(35) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை கரியபெருமாள் வலசையில் இருந்து, இருசக்கர வாகனத்தில் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக அனுமந்தீா்த்தத்திற்கு சென்றனா்.

அனுமன்தீா்த்தம் அருகே வளைவில் திரும்பும் போது, ஊத்தங்கரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானாா். படுகாயமடைந்த வெங்கடேசன், கோட்டீஸ்வரன் ஆகியோா் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com