மாட்டு கொட்டகை தீப்பிடித்ததில், மூதாட்டி உயிரிழந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த கொம்மம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜெயம்மாள் (80), மாட்டுக் கொட்டகையில் புதன்கிழமை இரவு உறங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கொட்டகை தீப்பிடித்ததில், ஜெயம்மாளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் ராதாகிருஷ்ணன் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் செல்வராஜ் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.