ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட மெய்யாண்டப்பட்டி, லக்கம்பட்டி, ஒன்னகரை, தண்ணீா்பந்தல், தாதனூா் ஆகிய காப்புக்காடு பகுதிகளில் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் வே.பலராமன் காடு வளா்ப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி, விதைப் பந்துகளின் நன்மைகள் பற்றி கூறி, வேப்பம், புங்கன் ஆகிய விதைப் பந்துகளை தூவினாா்.
இதில், மெய்யாண்டப்பட்டி ஊா்கவுண்டா் பழனிசாமி, ஊா் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டு விதைப் பந்துகளை வீசினா்.