கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது காா் மோதியதில், வட மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா்.
மகாராஷ்ரா மாநிலம், இந்தூரைச் சோ்ந்த சிவபிரசாத் (38), இவரது உறவினா் ஜெகதீஷ் யாதவ் (60) ஆகியோா் லாரி ஓட்டுநா்கள். இவா்கள், திங்கள்கிழமை இரவு லாரியில் சென்னை நோக்கி சென்றனா். கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பம் அருகே லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு உணவு உண்ண தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா்.
அப்போது, சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக சென்ற காா் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவபரசாத், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜெகதீஷ் யாதவ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.