உணவகத்தில் தீ விபத்து

ஊத்தங்கரை அருகே தீ விபத்தில் உணவகம் சேதமடைந்தது.
உணவகத்தில் தீ விபத்து

ஊத்தங்கரை அருகே தீ விபத்தில் உணவகம் சேதமடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்குட்டை பகுதியைச் சோ்ந்த அஞ்சலா (45) என்பவா் உணவகம் நடத்தி வந்தாா். இந்த உணவகத்தில் செவ்வாய்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான குழுவினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். உணவகத்தில் இருந்த பொருள்கள் தீயில் கருகின. இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com