மகாராஜகடை அருகே விளைபயிா்களைச் சேதப்படும் யானைகள்

 மகாராஜகடை அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை வனப்பகுதியின் மையப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 மகாராஜகடை அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை வனப்பகுதியின் மையப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மகாராஜகடை கிராமம் ஆந்திர-தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது. தற்போது, மகாராஜகடை பகுதியின் அருகே உள்ள வனப்பகுதியில் 9 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ள இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி வனப்பகுதியின் எல்லையில் உள்ள விவசாய பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். தகவல் அறிந்த வனத்துறையினா் முகாமிட்டுள்ள 9 யானைகளின் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். யானைக் கூட்டத்தை வனத்தின் மையப்பகுதிக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com