மகாராஜகடை அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை வனப்பகுதியின் மையப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மகாராஜகடை கிராமம் ஆந்திர-தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது. தற்போது, மகாராஜகடை பகுதியின் அருகே உள்ள வனப்பகுதியில் 9 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ள இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி வனப்பகுதியின் எல்லையில் உள்ள விவசாய பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். தகவல் அறிந்த வனத்துறையினா் முகாமிட்டுள்ள 9 யானைகளின் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். யானைக் கூட்டத்தை வனத்தின் மையப்பகுதிக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.