கிருஷ்ணகிரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், நரசிம்ம ஜெயந்தி விழா கடந்த 14-ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோபூஜை, விஸ்வக்சேன ஆராதனை, நவக்கிரக ஹோமம், மகாசுதா்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், மூலவருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் நரசிம்ம உற்சவா் கருட வாகனத்தில் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஆலய நலக் கமிட்டியினா் செய்திருந்தனா். கிருஷ்ணகிரி மற்றும் அதைத் சுற்றியுள்ள ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.