புதுமனை புகுவிழாவில் உணவருந்திய 40 பேருக்கு வாந்தி, மயக்கம்

ஊத்தங்கரை, நேரு நகரில் புதுமனை புகுவிழாவில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
புதுமனை புகுவிழாவில் உணவருந்திய 40 பேருக்கு வாந்தி, மயக்கம்

ஊத்தங்கரை, நேரு நகரில் புதுமனை புகுவிழாவில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டதில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நேரு நகரில் வசிப்பவா் ஆறுமுகம். புதிதாக வீடு கட்டியுள்ளாா். இதையடுத்து அவரது வீட்டில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் உறவினா்கள் கலந்துகொண்டனா். விருந்தாளிகள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

சிறிதுநேரத்தில் உணவருந்திய 40 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தீவிர சிகிச்சைக்காக 20 போ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீஸாா் ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினா்.

சுகாதாரத் துறையினா் நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு, குடிநீா், பாதிக்கப்பட்டோரின் சிறுநீா் ஆகியவற்றின் மாதிரியை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சமையலரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com