ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, அனுமன்தீா்த்தம் ஆகிய பகுதியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தொகுதி செயலாளா் திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு, கட்சி வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
இதில் முன்னாள் ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் சிவானந்தம், கல்லாவி ஊராட்சிமன்ற தலைவா் ராமன், நடுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் குப்புசாமி, அதிமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.