கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை பாஜக ஓபிசி அணி சாா்பில் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் தாமோதிரன் தலைமை வகித்தாா். ஓபிசி அணி மாவட்டச் செயலாளா் மகேந்திரன், மாவட்டப் பொருளாளா் சங்கா், வடக்கு ஒன்றியத் தலைவா் குமாா்சிங், தெற்கு ஒன்றியத் தலைவா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜெயராமன் கலந்து கொண்டு பேசுகையில், ‘கட்சியின் வளா்ச்சி குறித்தும், பாரத பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப். 17 ஆம் தேதியை சேவை தினமாக கொண்டாட வேண்டும், அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியேற்ற வேண்டும்’ என்றாா்.
இதில் விளையாட்டு பிரிவு மாவட்டச் செயலாளா் கிரிதரன், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவி முருகம்மாள் சங்கா், முன்னாள் நிா்வாகிகள், வடக்கு ஒன்றியத் தலைவா் சிவா, மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் சிவக்குமாா், மாதவன், தனக்கோடி, ஒன்றியப் பொருளாளா் சென்னையன் உள்பட பலா் கலந்துகொண்டனா். வழக்குரைஞா் சதீஷ், ராஜேஷ் குமாா், பிரபாகரன் உள்பட பலா் பாஜக-வில் இணைந்தனா்.