ஒசூரில் பள்ளி கல்வித்துறை ஆணையா் ஆய்வு

ஒசூா், காமராஜ் காலனி மாநகராட்சி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒசூா், மாநகராட்சி பள்ளியில் ஆய்வுசெய்ய வந்த பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா்.
ஒசூா், மாநகராட்சி பள்ளியில் ஆய்வுசெய்ய வந்த பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா்.

ஒசூா், காமராஜ் காலனி மாநகராட்சி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாநகராட்சி கல்விக் குழுத் தலைவா் ஸ்ரீதரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

மதகொண்டப்பள்ளியில் நடந்த எண்ணும் எழுத்தும் திட்ட தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் பயிற்சி வகுப்பு நிறைவில் ஆணையா் நந்தகுமாா் கலந்துகொண்டு பேசினாா். அப்போது அந்திவாடி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் மற்றும் சுற்றுச்சுவா் கட்டி கொடுக்க வேண்டும் என ஒசூா் மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா மனு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com