காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த எல்.சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், மிட்ட அள்ளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான எல்.சுப்பிரமணியன் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா் .
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்.பி. ஆகியோா் ஒப்புதலின் பேரில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி அவரை நியமித்து அறிவித்துள்ளாா்.
இதற்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரிக்கும் , பரிந்துரை செய்த கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா், மாநிலத் துணைத் தலைவா் ராம சுகந்தன் உள்ளிட்டோருக்கு எல்.சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துள்ளாா்.