கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏப். 19-ஆம் தேதி (புதன்கிழமை) காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்கூா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அனைத்து உள்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள், 30 காவல் நிலையங்களில் ஏப். 19-ஆம் தேதி பொதுமக்கள் மனு அளிக்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக வழங்கி நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.