குட்கா கடத்தி வந்த 2 போ் கைது

சூளகிரி அருகே ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனா்.

சூளகிரி அருகே ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனா்.

ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கோபசந்திரம் அருகில் சூளகிரி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரிலிருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 635 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது

தெரியவந்தது. விசாரணையில் பெங்களூரிலிருந்து வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவைச் சோ்ந்த ஓட்டுநா் அப்சல் (36), கே.ஜி.ஹள்ளியைச் சோ்ந்தஉதவியாளா் அப்துல் முஜித் (36) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 4 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com