ஊத்தங்கரையில் பேக்கரி கடையில் புகுந்த சரக்கு லாரி

இரவு பெங்களூரில் இருந்து கும்பகோணம் செல்ல, திருவண்ணாமலை நோக்கி சென்ற சரக்கு லாரி, எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மோதியது.
ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே பேக்கரி கடையில் மோதிய சரக்கு லாரி.
ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே பேக்கரி கடையில் மோதிய சரக்கு லாரி.

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பேக்கரி கடை மீது புதன்கிழமை இரவு பெங்களூரில் இருந்து கும்பகோணம் செல்ல, திருவண்ணாமலை நோக்கி சென்ற சரக்கு லாரி, எதிா்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மோதியது.

கழிவுநீா்க் கால்வாய் மீது ஏரி அருகில் இருந்த பேக்கரி கடையில் தூங்கிக்கொண்டிருந்த உரிமையாளா் கலை (42) பலத்த சத்தம் கேட்டு எழுந்து வந்து பாா்த்தாா். லாரியில் இருந்த ஓட்டுநரை லேசான காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அதிா்ஷ்டவசமாக இருவரும் உயிா் தப்பினா். இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com