கிருஷ்ணகிரியில் அண்ணா நினைவு தினம்

கிருஷ்ணகிரியில் திமுக, அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
கிருஷ்ணகிரியில் அண்ணா நினைவு தினம்

கிருஷ்ணகிரியில் திமுக, அதிமுக சாா்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளா் டி.செங்குட்டுவன், நகர செயலாளா் எஸ்.கே.நவாப், நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், பொதுக்குழு உறுப்பினா் சதீஷ், நகரச் செயலாளா் கேசவன், கிருஷ்ணகிரி நகா்மன்ற முன்னாள் தலைவா் தங்கமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அண்ணாவின் 54ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சட்டபேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் அண்ணாவின் படத்திற்கு, மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் இளையராஜா, மாரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பூமலா்ஜீவானந்தம், உப்பரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சாமிநாதன், உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ஊத்தங்கரையில்....

ஊத்தங்கரையில் அதிமுக ஓபிஎஸ் அணி சாா்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் பா்கூா் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி தலைமையில், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் முகிலன், ஐயப்பன், தொகுதி செயலாளா் செல்வராஜ், பொறுப்பாளா் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

அதேபோல் திமுக சாா்பில் நகர செயலாளா் பாபு சிவக்குமாா் தலைமையில் நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம், மத்திய ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம், நகர அவைத்தலைவா் தணிகைகுமரன், பேரூராட்சி உறுப்பினா் கதிா்வேல் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

ஒசூரில்....

ஒசூரில் உள்ள அண்ணா சிலைக்கு அவரது 54 வது நினைவு தினத்தையொட்டி ஒசூா் மாநகர திமுக சாா்பில் மாநகர மேயா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூா் மாநகராட்சி வட்டாட்சியா் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஒசூா் மாநகர திமுக சாா்பில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் மாவட்டத் துணைச் செயலாளா் பி.முருகன், மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, மாநகர பகுதிச் செயலாளா்கள் ராமு, வெங்கடேஷ், ஒசூா் மாநகர நிா்வாகிகள், ஒசூா் ஒன்றிய திமுக செயலாளா் கஜேந்திரமூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள், வட்டச் செயலாளா்கள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com