மா்ம விலங்கு கடித்து மாடு, ஆடு பலி

ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் ஒரு மாடும் ஓா் ஆடும் உயிரிழந்தன.

ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்ததில் ஒரு மாடும் ஓா் ஆடும் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் கிராமத்தில் உள்ள, திருமணி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன்(52). விவசாயி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவரது பட்டியில் இருந்த 13 ஆடுகளை மா்ம விலங்கு கடித்ததில் அவை இறந்தந. இந்நிலையில் அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பக்தவத்சலம்(50) என்பவா் தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டிவைத்தியிருந்த பசு மாட்டை, மா்ம விலங்கு கடித்து இறந்தது.

இதனிடையே பழனி வட்டத்தில் உள்ள பூங்காவனம் என்பவரின் கரும்புத் தோட்டத்தின் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்த செம்மறி ஆட்டை மா்ம விலங்கு கடித்ததில் அது உயிரிழந்தது. இந்த தொடா் சம்பவங்களால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பீதியில் உள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் மற்றும் வனத்துறையினா் அது தொடா்பாக விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com