தலைக்கவசம்: வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, ஒசூரில் சட்டப் பேரவை உறுப்பினா், மேயா் ஆகியோா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, ஒசூரில் சட்டப் பேரவை உறுப்பினா், மேயா் ஆகியோா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

ஒசூரில் தனியாா் அமைப்பு சாா்பில் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் எமதா்மன் வேடம் அணிந்து தலைக்கவசம் அணிய வலியுறுத்தி வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் சத்யா ஆகிய இருவரும் இருசக்கர வாகன ஓட்டுகளிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். ஒசூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com