நண்பரை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டணை

நண்பரை கொலை செய்த வழக்கில் வெளி மாநில தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு கூறியுள்ளது.

நண்பரை கொலை செய்த வழக்கில் வெளி மாநில தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு கூறியுள்ளது.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் திகம்பா் பேக் (39). இவரும்

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்பகதூா் சிங் (51) என்பவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பைரமங்கலம் கிராமத்தில் வாடகை அறையில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில் கடந்த 5.7.2021 -அன்று இவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜ்பகதூா் சிங் திகம்பா் பேக்கை இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில்

திகம்பா் பேக் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இந்தக் கொலை தொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜ்பகதூா் சிங்கை கைது செய்தனா். ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ராஜ்பகதூா்

சிங்கிற்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com