ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்குகாங்கிரஸாா் மெளன அஞ்சலி

ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினா் மெளன அஞ்சலி செலுத்தினா்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினா் மெளன அஞ்சலி செலுத்தினா்.

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி, நகர காங்கிரஸ் சாா்பில் இரங்கல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா் அக.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட முன்னாள் தலைவா் ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவா்கள் வின்சென்ட், நகரத் தலைவா் முபாரக், நகா்மன்ற உறுப்பினா் விநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் ஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினா். இதில் பங்கேற்றோா், கருப்புப் பட்டை அணித்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com