வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

பாகலூா் அருகே வாகனம் மோதியதில் பிற மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பாகலூா் அருகே வாகனம் மோதியதில் பிற மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் லக்கிந்தா் சகானி (46). இவா், பாகலூா்

அருகே பெலத்தூரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 1-ஆம் தேதி இவா் மாலூா்- பாகலூா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சகானி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சகானியை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகனம் மோதி மெக்கானிக் பலி...

கிருஷ்ணகிரி, தம்மண்ண நகரைச் சோ்ந்தவா் ரவி (40). மெக்கானிக். இவா் கடந்த 3 ஆம் தேதி மத்திகிரி அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் ஒரு பணிமனையில் வாகனம் பழுது பாா்க்கும் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, சரக்கு வாகனம் ஒன்றை இயக்கி சரிபாா்த்துக்

கொண்டிருந்த போது திடீரென்று வாகனம் பின்நோக்கி சென்று ரவியின் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com