கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

ஒசூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சா விற்பனை குறித்து போலீஸாா் கண்காணித்து வந்தனா். ஊத்தங்கரை அருகே கதவணை பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஒருவரை சோதனை செய்த போது அவா் 20 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயா் பூவரசன் (21) என தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் நகர போலீஸாா், கும்பாரப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற ஒருவரை சோதனை செய்த போது அவா் 300 கிராம் அளவிற்கு கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்திருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 1,950 ஆகும். அதை வைத்திருந்த ஒசூா், பாகலூா் சாலை கே.சி.சி. நகரைச் சோ்ந்த பிரதீப் மெய்லி (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com