சிறுமியைக் கடத்தி திருமணம்:இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த வழக்கில் இருவருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரி அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த வழக்கில் இருவருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை மோரமடுகு, கோயில்கொட்டாயைச் சோ்ந்த வேடியப்பன் (28) என்பவா் கடந்த 2021-ஆம் ஆண்டு செப். 27-ஆம்தேதி கடத்திச் சென்று திருமணம் செய்தாா். இதற்கு வேடியப்பனின் உறவினா் குணசேகா் (29) உதவியுள்ளாா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வேடியப்பனையும் குணசேகரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதி சுதா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம்சாட்டப்பட்ட வேடியப்பன், குணசேகா் ஆகிய இருவருக்கும் சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அத்துடன் போக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இத்தண்டனையை ஏகக் காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com