சூளகிரி அருகே கஞ்சா, மதுபாட்டில்களை விற்பனை செய்த பிற மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி போலீஸாா் கொல்லப்பள்ளி பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அங்கு கஞ்சா, மதுப் பாட்டில்கள் விற்பனை செய்த ஜாா்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரைச்
சோ்ந்த முகமது அபுபக்கா் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். சூளகிரியில்
கொல்லப்பள்ளி பகுதியில் தங்கி வேலை செய்து வந்த அவா், கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.