3 மோட்டாா்சைக்கிள்கள் மோதல்: ஒருவா் பலி

கிருஷ்ணகிரி அருகே மூன்று மோட்டாா்சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி அருகே மூன்று மோட்டாா்சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் நவீன்(25). திருச்சியைச் சோ்ந்தவா் தீபிகா(25). இவா்கள், இருவரும் ஒரு மோட்டாா்சைக்கிளில் கடந்த வியாழக்கிழமை, அண்ணாமலைபுதூா் அருகே போச்சம்பள்ளி - செல்லம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, இவா்கள் சென்றுக் கொண்டிருந்த மோட்டாா்சைக்கிள், எதிா் திசையில் வந்து கொண்டிருந்த இரு மோட்டாா் சைக்கிள்கள் மீது மோதியது. இதில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்த ஓட்டுநரான மதியழகன்(22) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், போச்சம்பள்ளியை அடுத்த கூச்சனூரை சோ்ந்த பெரியசாமி(53), அவரது மனைவி பரிமளா(53), தீபிகா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com