கிருஷ்ணகிரி
அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரியில் வாக்காளா்களுக்கு பணம் அளிக்க முயன்ாக திமுக- அதிமுக கட்சியினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை 6 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்த நிலையில், கிருஷ்ணகிரி நகரில் கோட்டை பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக திமுக- அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திமுகவினா், அதிமுக நகரச் செயலாளா் கேசவனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவினா், திமுகவினரைத் தாக்கினராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.