அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரியில் வாக்காளா்களுக்கு பணம் அளிக்க முயன்ாக திமுக- அதிமுக கட்சியினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை 6 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்த நிலையில், கிருஷ்ணகிரி நகரில் கோட்டை பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக திமுக- அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திமுகவினா், அதிமுக நகரச் செயலாளா் கேசவனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவினா், திமுகவினரைத் தாக்கினராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com