கிருஷ்ணகிரி
ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு
ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன் ஆய்வு செய்து நோயாளிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
அதைத் தொடா்ந்து ஒசூா், ராயக்கோட்டை சாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவமனை இடத்தை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, இணை இயக்குநா் தா்மா், முதன்மை மருத்துவ அலுவலா் ஞான மீனாட்சி, மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.