தமிழக- கா்நாடக எல்லையில்
போக்குவரத்து நெரிசல்

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

தோ்தலுக்காக கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு ஏராளமானோா் வாகனங்களில் சென்றதால் தமிழக - கா்நாடக மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரில் வசித்து வரும் தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமானோா் தோ்தலில் வாக்களிப்பதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்திப்பள்ளி சுங்கச்சாவடியிலிருந்து தமிழகத்தின் இஎஸ்ஐ வரை 3 கி.மீ. தொலைவுக்கும், அத்திப்பள்ளி சுங்கச்சாவடி முதல் கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி பேருந்து நிலையம் வரை 2 கி.மீ. தொலைவுக்கும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொழிலாளா்களுக்கு தொடா்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூா் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டம் அலோமோதியது. இதன் காரணமாக ஒசூா் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படவரி... ஒசூரில் போக்குவரத்து நெரிசலில் சாலையில் நீண்ட தொலைவுக்கு நிற்கும் வாகனங்கள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com