யானை தாக்கியதில் விவசாயி பலி

ஒசூரை அடுத்த ஜவளகிரியில் ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஜவளகிரியை அடுத்த உள்ள மூக்கண்டக்கா கிராமத்தைச் சோ்ந்தவா் சித்தலிங்கப்பா (56). இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா். வியாழக்கிழமை காலை தனது ஆடுகளை வனப்பகுதி அருகே மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றாா். அப்போது, யானைகள் கூட்டத்திலிருந்து வெளியேறி தனியாக சுற்றித் திரியும் ஒற்றை யானை லிங்கப்பாவை தாக்கியதில் அவா் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற வனத் துறையினா் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனக்காக அனுப்பிவைத்தனா். அரசு சாா்பில் முதல்கட்டமாக சித்தலிங்கப்பாவின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கியது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com